
கண்டல் தாவரங்களை பேணிப்பாதுகாப்பதன் மூலம் மனிதன் மற்றும் உயிரினங்களின் இருப்புக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்றும் ,உயிரினங்களின் இருப்புக்கும் பல பிரதிபலன்கள் ஏற்படும் எனவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.
திருகோணமலை சாம்பல் தீவு களப்பு பிரதேசத்தில் கண்டல் தாவரங்கள் நடும் நிகழ்வில் இன்று (04) கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
கண்டல் தாவரங்கள் சூழலை பாதுகாப்பதுடன் அதிகமான ஒட்சிசனை சூழலுக்கு விடுவிக்கின்றது . இதனால் மனிதன் உட்பட உயிரினங்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படுகின்றது.
கடலரிப்பு போன்ற விடயங்களை தடுக்கவும் கண்டல் தாவரங்கள் ஏதுவாக அமைகின்றது. எனவே அத்தாவரங்களை பேணிப்பாதுகாத்து சூழல் சமநிலைக்கு பங்கம் ஏற்படாதவாறு செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வின் பொது 500 கண்டல் தாவரங்களும் நடப்பட்டன .
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வளங்கள் முகாமைத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பி. தனேஸ்வரன், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வளங்கள் முகாமைத்திணைக்களத்தின் பிரதேச பொறியியலாளர் எம். துளசிதாசன், திருகோணமலை நகரசபை செயலாளர், இலங்கை கடற்படை உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்