நாளை தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல்!

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வு உரும்பிராய் நினைவிடத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மேலும், அவை தீர்வின் படி , ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அஞ்சலி நிகழ்வில் ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைக்கவுள்ளதாகவும் , அகவணக்கம், மலரஞ்சலி என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , அந் நிகழ்வுகளின் தொடர்ச்சியான ஏற்பாடாக பொன் சிவகுமாரனின் காலத்தில் அவருடன் செயற்பட்ட அரசியல் தலைவர்கள், நண்பர்களினால் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *