தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வு உரும்பிராய் நினைவிடத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
மேலும், அவை தீர்வின் படி , ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அஞ்சலி நிகழ்வில் ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைக்கவுள்ளதாகவும் , அகவணக்கம், மலரஞ்சலி என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , அந் நிகழ்வுகளின் தொடர்ச்சியான ஏற்பாடாக பொன் சிவகுமாரனின் காலத்தில் அவருடன் செயற்பட்ட அரசியல் தலைவர்கள், நண்பர்களினால் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.