ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க உடன்பாடு எட்டப்படவில்லை! மனோ கணேசன்

ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லது ஒழிப்பதற்கு கட்சி தலைவர்கள் கூடத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சில கட்சிகள் முழுமையாக அகற்றப்படுவதை விரும்பாமல் பகுதியளவில் அகற்றப்படுவதை கோருகின்றனர் .

இதன் அடிப்படையிலே ஜனாதிபதிமுற்றாக இல்லது ஒழிக்க தீர்மானித்தோம். முதலாவதாக 20 ஆவது திருத்தத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக 19 ஆவது திருத்தத்தை கொண்டுவருவது, மற்றது 19 ஆவது திருத்தம் முழுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம் .

ஆனால், ஜனாதிபதி அமைச்சு பதவியை வகிக்கவேண்டும் என்ற கருத்தில் முரண்பட்டோம் .

அதன் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சு பதவியை மாத்திரம் வகிக்கலாம். என்ற தீர்மானத்திற்கு நாம் வந்தோம் .

இதனை அடுத்து பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது என்பதை இந்த கூடத்தில் கலந்து கொள்ளாத பொதுஜன பெரமுன ஐக்கிய முன்னணி எழுதி அனுப்பியிருந்தது .

அதனை பீஜயதாச ராஜபக்ச எடுத்து கூறினார் .ஜனாதிபதி பிரதமராக இருக்க முடியாது .

பிரதமர் நாடாளுமன்றத்தில் தான் நம்பிக்கை இல்ல, பிரேரணை மூலம் மட்டும் தான் நிற்க முடியும் என்ற முடிவிற்கு வந்தோம் .

இந்த கடைசி சந்திப்பிற்கு ஆளும் கட்சி பொதுஜன பெரமுன வரவில்லை .

இரட்டை பிரஜாவுரிமை பிரச்சனை இல்லை என பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் விஜ்ஜதாச ராஜபக்ஸவும் கூறுகின்றனர் .

20 ஐ அகற்றி, 19 ஆவது கொண்டுவரவேண்டும் என்ற முற்போக்கான திட்டம் வரவேண்டும் என்றே தாம் நினைப்பதாகவும் தெரிவித்தனர்.

தற்போது ஆண்டுகொண்டிருக்கும் அரசாங்கம் தங்கள் விழுந்த குழியில் எங்களை விழச்செய்கிறார்கள் .

நாங்கள் விழ மாட்டோம், நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.

ராஜபக்சர்களை காப்பாற்றும் திடம் இருக்குமானால் அந்த குழியில் அவர்கள் விழுவார்கள் – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *