வவுனியா – செட்டிக்குளம் பகுதிக்கு உட்பட்ட வாழவைத்த குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும் ஊடகவியலாளருமான முகமட் சந்தியா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ;
வவுனியா – செட்டிக்குளம் பகுதிக்கு உட்பட்ட வாழவைத்த குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை மாத்திரம் நம்பி இருக்கின்ற குடும்பங்கள் கடந்த மாதம் 28.05.2022 அன்று குறித்த கிராமத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு டீசல் வந்துள்ளது.
இந்நிலையில் டீசலை கொள்வனவு செய்வதற்காக விவசாயிகள் சென்று இரவு இரவாக வரிசையில் நின்று பெற்றுள்ளார்கள்.
மறு நாள் காலை சில விவசாயிகளின் வாகனங்களைக் கொண்டு வருவதற்கான எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கொண்டு வந்து அங்கு டீசலினை பெறுவதற்காக நிலைமை இருக்கவில்லை .
விவசாய நிலங்களில் நாங்கள் வைத்திருக்கும் உழவு இயந்திரங்கள் நிற்கின்றன. இச் சந்தர்ப்பத்தில் அங்குள்ள முகாமையாளருடன் பேசி குறிப்பிட்ட டீசலுக்கான பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டு டீசலினை கொண்டு வந்தோம்.
இந்த சந்தர்ப்பத்தில் செட்டிக்குளப் பிரதேசத்திற்கு உட்பட்ட பறையநலம் குளம் பொலிஸாரால் விவசாயிகளுடைய குறுகிய அளவிலான 20,30 லீற்றர் டீசல் கொள்கலன்களை பறிமுதல் செய்தனர்.
இதுமட்டுமன்றி கிராமத்தில் விவசாயம் செய்யும் உழவு இயந்திரங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் பணிக்கு சென்றிருந்த சமயத்தில் அவர்களுடைய வீட்டிற்குச் சென்று அங்கிருந்த பெண்களை அழைத்து வீடுகளை பலவந்தமாக திறந்து டீசல் உள்ளதா என பார்த்துள்ளார்கள்.
அது மாத்திரமின்றி அறையில் இருந்த பெண்களின் கைகளை பிடித்து இழுத்து வெளியே வீசியதுடன் கட்டில்களுக்கு கீழே டீசல் உள்ளதா எனவும் தேடியுள்ளனர்.
இந்த சமயத்தில் பெண்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விவசாயிகளிடம் இருந்த டீசலை கைப்பற்றி சென்ற பொழுது மக்கள் வீதியினை மறித்து நீதி கேட்டிருந்தார்கள் .இதற்கான எந்த முடிவும் பொலிஸார் தரவில்லை .
பாராளுமன்றத்தில் இருக்கின்றவர்களிடம் எவ்வளவோ சொத்துக்கள் இருக்கின்றன,விவசாயிகளின் டீசலை பறிமுதல் செய்வது என்பது விவசாயிகளுக்கு செய்கின்ற அநீதி.
செப்டெம்பர் மாதம் வர இருக்கின்ற அரிசி தட்டுப்பாடடில் நீங்கள் உணவு உண்ண வேண்டுமா இல்லையா ? என் கேட்டிட போது அங்கிருந்து சென்று விட்டார்கள்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள்,விவசாயிகளுக்கு இழைக்கப்படட அநீதி தொடர்பாக நீதி கோரி கூட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம்.
இதனை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆணையுடன் 70- 100 நபர்களை 10 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
அந்தவகையில் 12 பேரையும் 4 வாகனங்களையும் இனங்கண்டுள்ளோம் . எனவே வாகனத்துக்கு சொந்தக்காரரும் இனங்காணப்பட்ட நபர்களும் சரணடைய வேண்டும் பின்பு பிணையில் விடப்படும் என்ற செய்தியினை தெரிவித்திருந்தனர்.
எங்களது விவசாயிகள் யாராவது டீசல் விற்பனை செய்திருந்து கையும் காலுமாக டீசலுடன் பிடிக்கப்பட்டிருந்தால் மனமுகர்ந்து அனுப்பியிருப்போம்.
பொருளாதாரம் இன்னும் சீராகாத நிலையில் விவசாயிகள் கடனாளிகள் ஆகி இருக்கிறார்கள். இதற்கமைய குறித்த பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடமும் தேசிய பொலிஸார் முறைப்பாட்டு ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்துள்ளோம் .
எங்கள் விவாசாயிகளுக்கான நீதி கிடைக்க வேண்டும்.இல்லையேல் வவுனியா தொடக்கம் கொழும்பு வரை அமைதியான முறையில் போராடடம் ஒன்றினை மேற்கொள்ள தயாராக உள்ளோம்.
கௌரவ படுத்த வேண்டிய விவசாயிகளின் சட்டை பைகளை இழுக்கின்ற இந்த அதிகாரம் மிக்க அதிகாரிகளின் இந்த கடும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.