ரஷ்ய விமானம் குறித்து நாமல் வெளியிட்ட டுவிட் பதிவு!

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ‘ஏரோஃப்ளோட்’ விமானம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ட்வீட்டர் பதிவொன்றிலே இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்யா இலங்கையுடன் நீண்டகாலமாக சுமுகமான உறவை பேணி வருவதாகவும், ஆபத்தான நேரங்களில் ரஷ்யா இலங்கைக்கு ஆதரவளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிட் தொற்றின் போது கூட ரஷ்யா தொடர்ந்து உதவியதோடு, நமது சுற்றுலாத் துறையையும் புத்துயிர் பெற உதவும் வகையில் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பியிருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *