மத்திய வங்கியின் மீதான அநாவசிய தலையீடுகள்; முன்னாள் பிரதி ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் மத்திய வங்கியின் சுயாதீனத் தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன வலியுறுத்தி உள்ளார்.

மத்திய வங்கி மீதான எந்தவொரு தலையீடுகளும் தற்போதைய பொருளாதார நெருக்கடில் இலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வலுவிழக்கச் செய்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்றுக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.

ஊழியர்களுக்கான கொடுப்பனவை இடையூறின்றி மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிடவேண்டும் என்று பிரதமர் வெளியிடப்பட்ட கருத்து பல்வேறு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த நடவடிக்கையானது நீரிழிவு நோயாளிக்கு சீனி அதிகளவில் உள்ள உணவை வழங்குவதைப் போன்ற ஒரு செயற்பாடு என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மத்திய வங்கியின் மீதான அநாவசிய தலையீடுகள், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *