மே 9 சம்பவம்: 2400 பேருக்கும் மேற்பட்டோர் கைது

கொழும்பு, ஜூன் 05

கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக இதுவரை 2400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி 2423 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 1069 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்களில் 1300 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *