ஒரு வாரத்தின் பின் மூதூரில் மண்ணெண்ணெ விநியோம்; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

மூதூர் பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆறு நாட்களுக்கு பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.

ஒருவருக்கு 300 ரூபாய்க்கு மாத்திரமே இவ் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெயை பெற்றுக் கொண்டனர்.

காலையிலிருந்து சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு, மண்ணெண்ணெய் பெறுவதற்காக தாய்மார்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு இவ் அரசாங்கம் தம்மை ஆளாக்கியுள்ளது

இதன்போது பொதுமக்கள் தமது கஷ்டங்களை அரசாங்கத்தின் மீது உள்ள ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியதோடு இதற்கு உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *