இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றோம்: ரணில்

கொழும்பு, ஜுன் 05

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு அண்டை நாடான இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு ஏனைய நாடுகள் முன்வந்துள்ள போதிலும், இந்தியா ஏற்கனவே இலங்கைக்காக பலவற்றை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அல்லது ராஜபக்க்ஷ குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன என நேர்காணலில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், அவர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றார். இது ராஜபக்க்ஷர்களுக்கு மாத்திரம் அல்ல எவருக்கும் பொருந்தும் எனவும், சட்டத்தை மீறும் எந்தவொரு தரப்பினரும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *