மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தமிழ் சிறுமியொருவருடன் சிங்கள இராணுவ சிப்பாய்கள் சிரித்து கதைபேசி விளையாடும் காட்சியொன்று இன்றையதினம் மூதூரில் பதிவாகியுள்ளதோடு குறித்த இராணுவச் சிப்பாய்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த தமிழ் தாயொருவர் சிறு பிள்ளையை வைத்துக் கொண்டு எரிபொருளை நிரப்புவதற்கு சிரமப்பட்டுள்ளார்.
இதனை அங்கு காவல் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய்கள் அவதானித்துவிட்டு சிறுபிள்ளையை தம்மிடம் ஒப்படைத்துவிட்டு, நீங்கள் எரிபொருளை நிரப்புங்கள். அதுவரை பிள்ளையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்று அப்பிள்ளையிடம் கதைபேசி சிரித்து விளையாடியுள்ளனர்.
பின்வரிசையில் இருந்த குறித்த பெண்ணிண் கஷ்டத்தை உணர்ந்து முன்னால் அழைத்து எரிபொருள் நிரப்புவதற்கு இராணுவ சிப்பாய்கள் ஏற்பாடு செய்திருந்தமையும், இராணுவ சிப்பாய்களின் சிறந்த மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டுகிறது.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளைப் நிரம்பிய தமிழ் சகோதரி இராணுவ சிப்பாய்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, பிள்ளையை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.
பிறசெய்திகள்