
கொழும்பு, ஜூன் 6: அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று திங்கள்கிழமை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தலைமையில் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவர்களும் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன் திருத்தச் சட்ட வரைவு வர்த்தமானியில் வெளியிடப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.




