அமைச்சரவைக் கூட்டம் இன்று – 21வது திருத்தம் உட்பட பல விசேட பிரேரணைகள் முன்வைப்பு!

அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

இன்று அமைச்சரவையில் அரசியலமைப்பின் 21வது திருத்தம் உட்பட பல விசேட பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

மேலும் மின்சாரக் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவு மற்றும் விவசாயம் செய்யாமல் விடப்பட்டுள்ள தனியார் காணிகளை விவசாயிகளுக்கு கையளிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

விவசாய அமைச்சகம் இந்த திட்டத்தை செயற்படுத்தவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *