வெள்ளிக்கிழமை ‘வீட்டிலிருந்து வேலை’ செய்யலாம் – அரச ஊழியர்களுக்கு கடமையில் மாற்றம் !

அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை வாரத்தில் நான்கு நாட்களாக குறைக்கப்படவுள்ளது.

இந்த யோசனை அடங்கிய பிரேரணை அமைச்சரவையின் அனுமதிக்க இந்த வாரம் சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை நேற்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *