10 மில்லியன் ரூபாய் பிணையில் அஜித் நிவாட் கப்ரால் விடுதலை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், 10 மில்லியன் ரூபாய் சரீர பிணையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தினியாவல பாலித தேரர் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணையின் போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கில் திருத்தப்பட்ட முறைப்பாட்டினை தாக்கல் செய்வதற்கும் தினியாவல பாலித தேரருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2014 ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனத்திற்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியின்றி இவ்வாறு பாரிய தொகை செலுத்தப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமான குற்றம் என முறைப்பாட்டாளர் தினியாவல பாலித தேரர் குறிப்பிடுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *