அரசியல்வாதிகளிடமிருந்து மின் கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை!

அரசியல்வாதிகளிடம் இருந்து காலதாமதமான மின்சார கட்டணத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவரான எம்.எம்.சி பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் மின்சார கட்டணங்கள் தொடர்பில் அவ்வப்போது பிரச்சினைகள் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ இல்லங்களில் அரசியல்வாதிகளின் மின்சாரக் கட்டணங்கள் அரசாங்கத்தினாலோ, சம்பந்தப்பட்ட அமைச்சராலோ அல்லது அமைச்சினாலோ செலுத்தப்படுகின்றன, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அமைச்சு நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிவிடுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மாறும்போதும், புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வசிப்பிடங்களை ஏற்கும்போதும், அவர்கள் தங்கள் விவரங்களை மாற்றவும், பெறுநர்களை மாற்றவும் தவறிவிடுகிறார்கள்.

10 மில்லியன் ரூபாவை காலதாமதமாக செலுத்தியதன் காரணமாக அரசியல்வாதி ஒருவரின் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்ட அவர், அந்த நபர் தான் மூன்று மாத காலம் மாத்திரமே வீட்டில் இருந்ததாக குறிப்பிட்டார், முன்னர் அங்கு வசதித்த அரசியல்வாதிகள் 10 மில்லியன் ரூபாவை செலுத்த தவறியுள்ளனர்.

குடியிருப்பை ஆக்கிரமித்திருந்த அரசியல்வாதி ஒருவர் காலமானதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற பல சிரமங்கள் ஏற்படுவதாக தெரிவித்தார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *