
பிரதமர் பதவியை ரணில் ஏற்றுக் கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி என்னை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “பெரும்பாலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எனக்கு ஆதரவளித்தால் மட்டுமே நான் பிரதமர் பதவியை ஏற்பேன் என்று அவரிடம் கூறினேன்.
எனவே, அவர் பிரதமராக வருவதற்கு வழிவகுத்த பெருமையை ரணில் விக்கிரமசிங்கே எனக்கு வழங்க வேண்டும்.
தற்போதைய நாடாளுமன்றத்தில் உள்ள 50வீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோசடி செய்பவர்கள். அதனால் இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்ற முடியாது.
தொலைநோக்குப் பார்வை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15வீதமானோர்அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிலர் ஹெரோயின் போதைப் பொருளை உட்கொண்டு இரவு விடுதிகளில் விபச்சாரிகளுடன் நேரத்தை செலவிடுகின்றனர்.
எனவே தற்போதைய அமைச்சரவையால் தேசத்தைக் காப்பாற்ற முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.