பசில் தொடர்பில் பெரமுன விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கொழும்பு, ஜுன் 08

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாகவும் அந்த வெற்றிடத்திற்கு, நாட்டின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவை நியமிக்க தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்தோடு, நாடு எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நாடாளுமன்றத்திற்கு வந்து பங்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அவ்வாறான எந்தவொரு சவாலையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் இணைந்துகொண்ட தம்மிக்க பெரேரா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *