நடிகை உபேக்ஷா பிணையில் சுவர்ணமாலி விடுவிப்பு

பிரபல நடிகையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா சுவர்ணமாலி, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வாகன விபத்து தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் உபேக்ஷா சுவர்ணமாலி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பொலிஸ் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் உபேக்ஷா செலுத்திய வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், மோட்டார் வாகன பரிசோதகர் ஒருவரினால் இந்த வாகனம் சோதனையிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி – நுகவெல வீதியில், நுகவெல பிரதேச செயலகத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது உபேக்ஷா பயணித்த வாகனம் மோதியுள்ளது.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *