கடவுச் சீட்டை விவகாரம்; நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் மகிந்த

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதிப் போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு அவரது கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும் இன்று (08) வரை அவர் அதனை ஒப்படைக்கவில்லை என நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

இதனை சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன கோட்டை நீதிவான் திலின கமகேவுக்கு அறிவித்தார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *