யாழில் பதுக்கிவைத்த பெட்ரோல் தீப்பற்றியதில் ஆசிரியை ஒருவர் பலி !

யாழில் பதுக்கி வைத்திருந்த பெட்ரோல் எதிர்ப்பாராதவிதமாக தீப்பற்றியதில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த ஓய்வுபெற்ற 41 வயதான பிரபாகரன் பிறேமலதா என்ற ஆசிரியை என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *