ஏழு ஆண்களை துஷ்பிரயோகம் செய்த பிரதேச செயலாளர்

வலப்பனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரமேஷ் அசங்க விக்கிரமரத்தினவை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரதேச செயலகத்தின் சிற்றூழியர்களான ஏழு ஆண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வலப்பனை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சந்தேகநபர் நேற்று (09) வலப்பனை பிரதேச செயலகத்திற்கு கடமைக்கு வந்த போது, கைது செய்துள்ளனர்.

பின்னர் இவர் வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, எதிர்வரும் (20) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *