
யாழ்ப்பாணம்,ஜுன் 16
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பெண்களை மோதித் தள்ளிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.
இதனால் அப் பெண்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
புதன்கிழமை 7.30 மணியளவில் யாழ். நகரின் மார்ட்டின் வீதிக்கு அண்மையாக பிரதான வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது,
படுகாயங்களுக்கு இலக்கான இரு பெண்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மோதிய வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அதன் இலக்கத் தகடுகளில் ஒன்று மோதிய மோட்டார் சைக்கிளில் சிக்கியுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்