கொழும்பில் குழாய் நீர் விநியோகம் தடைப்படும் பகுதிகள் அறிவிப்பு

கொழும்பு,ஜுன் 16

கொழும்பின் சில பகுதிகளில் சனிக்கிழமை (18) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு குழாய்நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 5 மற்றும் கொழும்பு 6 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 4 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *