
திருகோணமலை மொரவெல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையத்திலிருந்து கொழும்பிற்கு லொறியொன்றில் அனுமதியின்றி டீசல் கொண்டு சென்ற மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (16) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காலி, இரத்தினபுரி, கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அவர்களை திருகோணமலை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்