கிராம ரீதியாக உள்ள மீன்பிடி சங்கங்களை மீள் அமைப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் முகமாகவும் மீனவர்கள் எதிர் நோக்கு பிரச்சினைகளை ஆராயும் முகமாகவும் மன்னாரில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பு மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சந்திப்பு, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(17) காலை 10 மணியாலவில் மன்னார் கடற்றொழில் நீரியல் வளதிணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர்,மாவட்ட மீனவ சம்மேள பிரதிநிதிகள் மற்றும் கிராம ரீதியான மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
இவ் சந்திப்பில் மன்னார் மீனவர்கள் பெரும்பாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும், எரிபொருள் பிரச்சினை தொடர்பாகவும் மீனவர்களுக்கும் மீனவர்சங்கங்களுக்கும் விசேட அடிப்படையில் மண்ணென்னை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதே நேரம் கச்சதீவை இந்தியாவிற்கு வழங்க கூடாது எனவும் இந்திய மீனவர்களின் வருகை அண்மை நாட்களாக அதிகரித்துள்ளதாகவும் அதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் டக்லஸ் தேவானந்தா விரைவில் காத்திரமான முடிவுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அதே நேரம் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் விரைவில் இந்தியாவில் இருந்து கப்பல் சேவை ஊடாக யாழ் காங்கேசந்துறை ஊடாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
அதே நேரம் குறித்த விசேட சந்திப்பில் மீனவ காப்புறுதி திட்ட பயணாளர்களுக்கு காப்புறுதி பணத்தினையும் அமைச்சர் கையளித்ததுடன் ஆள்கடல் மீன்பிடி தொடர்பாக விசேட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதல்களையும் வழங்கிவைத்தமை குறிப்பிடதக்கது.







பிற செய்திகள்
- இரும்பு மனம் கொண்ட மனிதனால் மட்டுமே இதை செய்ய முடியும்! – ரணிலை புகழ்ந்து தள்ளும் பாலித
- சிலருக்கு கிடைத்தது; பலருக்கு ஏமாற்றம்! பொலிஸாருடன் முரண்பட்ட மக்கள் (படங்கள் இணைப்பு)
- தனது இராணுவத்தை நவீனமயமாக்கும் சீனாவுக்கு கிடைத்த இமாலய வெற்றி!
- இலங்கைக்கு கடதாசிகளை அணிபளிப்புச் செய்தது கொரியா (படங்கள் இணைப்பு)
- பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியே! தமிழர் ஆசிரியர் சங்கம்