முல்லைத்தீவில் மோட்டார் குண்டு கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அபிவிருத்தி பணியின் போது நிலத்தில் புதையுண்டு இருந்த வெடிபொருள் ஒன்று பணியில் ஈடுபட்டவர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வைத்தியசாலையின் பின்பக்கத்தில் உள்ள வளாகத்தில் வீதி அபிவிருத்தி பணிக்காக நிலத்தினை தோண்டும் போது நிலத்தில் புதையுண்டு இருந்த மோட்டார் குண்டு ஒன்றே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதுடன் இது குறித்த சட்ட நடவடிக்கையில் முள்ளியவளை பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *