அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு! ஓ.பி.எஸ். கோரிக்கையை நிராகரித்தது பொலிஸ் !!

அ.தி.மு.க.விற்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை பொலிஸாரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அதற்கு அனுமதி வழங்க கூடாது என்ற பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் தனி நபரின் உள் அரங்கத்தில் நடப்பதால் அதில் தலையிட முடியாது பொலிஸார் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

அத்தோடு பொது இடத்தில் நடந்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி தரவோ, மறுக்கவோ முடியும் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *