
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்களை 21ஆவது திருத்த சட்டமூலத்தில் உள்ளீர்க்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
21 ஆம் திருத்த சட்டமூலம் குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள், நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை நேற்று சந்தித்து சந்தித்து கலந்துரையாடினர்.
அதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுதந்திர கட்சியின் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,
20 ஆம் திருத்தச்சட்டத்தில் உள்ள பல பிரதான விடயங்கள் தொடர்பில் தங்களுக்கு ஆட்சேபனை இருந்ததாக குறிப்பிட்டார்.
இந்த திருத்தத்தில் அவை இடைக்கால ஏற்பாடாக உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, பிரதமரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் 20 திருத்தில் ஜனாதிபதிக்கு இருக்கிறது.
அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களை பதவி நீக்குதல் உள்ளிட்ட அதிகாரமும் முழுமையாக இடைக்கால ஏற்பாட்டு யோசனையாக 21ஆவது திருத்த சட்ட மூலத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.
இது, 20ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஒப்பானதாகும். நாட்டு மக்கள் அவ்வாறான நிலையை எதிர்பாக்கவில்லை.
எனவே, மீண்டும் 19 ஆம் திருத்தச் சட்டத்திற்கு திருத்தங்களுடன் செல்ல வேண்டும் என்பதே, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. இதற்கமைய நாங்கள் செயற்படுவோம்.
இது தொடர்பில் தாங்கள் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பிற செய்திகள்