பத்திரிகை விநியோகப் பணிகள் வரையறைக்குள்

கொழும்பு, ஜூன் 28

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் பத்திரிகை விநியோகப் பணிகள் வரையறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்புக்கு அப்பாலுள்ள சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக பத்திரிகை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் இன்மையால், கொழும்பின் சில பகுதிகளில், இன்றைய தினம் பத்திரிகை விநியோகிக்கப்படவில்லை என, பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகை அச்சிடப்பட்ட பின்னர், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு, குறித்த நிறுவனங்களின் போக்குவரத்து சேவை ஊடாக நேரடியாக விநியோகிக்கப்படுவதுடன், அங்கிருந்து ஏனைய பகுதிகளுக்கு தனியார் வாகனங்கள் மூலம் பத்திரிகை விநியோகிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *