இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சி சாலை ஊழியர்கள் தாம் கடமைக்கு வருவதற்கான பெற்றோலை வழங்குமாறு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பணிப்புறக்கணிப்பு காரணமாக மாவட்டத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரில் இருந்து தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் காலை 6.30 தொடக்கம் பணிக்கு செல்ல முடியாத நிலையில் பல மணி நேரம் காத்திருந்தனர்.அதே வேளை தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் மக்களும் பல மணி நேரம் காத்திருந்தனர்.