பொருண்மியம் நலிந்தவர்களுக்கு நல்லூர் பிரதேசசபையால் உதவி

பொருண்மியம் நலிந்தவர்களுக்கு நல்லூர் பிரதேசசபையால் வாழ்வாதார உதவிகள் பிரதேசசபையில் கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்டன. நல்லூர் பிரதேசசபையின் 6.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

அதற்கமைய பொருண்மியம் நலிந்த 12 குடும்பங்களுக்கு சைக்கிள்களும், சிறப்புத்தேவையுடைய 16 பேருக்கு  கட்டில்களும் , சிறப்புத்தேவையுடைய 3 சிறுவர்களுக்கு  வோக்கர்களும், பொருண்மியம் நலிந்த 3 குடும்பங்களுக்கு கோழிக்கூடுக ளும் கோழிக்குஞ்சுகளும் சிறப்புத்தேவையுடைய ஒருவருக்கு சைக்கிளும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *