பொருண்மியம் நலிந்தவர்களுக்கு நல்லூர் பிரதேசசபையால் வாழ்வாதார உதவிகள் பிரதேசசபையில் கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்டன. நல்லூர் பிரதேசசபையின் 6.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
அதற்கமைய பொருண்மியம் நலிந்த 12 குடும்பங்களுக்கு சைக்கிள்களும், சிறப்புத்தேவையுடைய 16 பேருக்கு கட்டில்களும் , சிறப்புத்தேவையுடைய 3 சிறுவர்களுக்கு வோக்கர்களும், பொருண்மியம் நலிந்த 3 குடும்பங்களுக்கு கோழிக்கூடுக
ளும் கோழிக்குஞ்சுகளும் சிறப்புத்தேவையுடைய ஒருவருக்கு சைக்கிளும் வழங்கப்பட்டன.