
சிலாபம், ஜுன் 29
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்றின் என்ஜினிலிருந்து டீசலை திருடினார் எனக் கூறப்படும் ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் சிலாபம் ரயில் நிலையத்தில் கடமையாற்றும் உதவி தொழில்நுட்ப உத்தியோகத்தராவார். அவரிடமிருந்து 15 லீற்றர் டீசலும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று (29) காலை கொழும்பு நோக்கி புறப்படவிருந்த ரயில் சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோதே சந்தேக நபர் டீசலைத் திருடியுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் சிலாபம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.