
தெல்லிப்பழைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கஞ்சாவை உடைமையில் வைத்திருப்பதாக தெல்லிப்பழைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 கிராம் 900 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இளைஞர் வறுத்தலைவிளான் பகுதியைச் சேர்ந்த 25 வயதானவர் என்று தெரிவித்த பொலிஸார் இளைஞருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.