
சிறுநீரக சத்திர சிகிச்சைகளை ,இலகுவாக்கும் நடைமுறைகள், வடக்கு கிழக்கு மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மெல்ஸ்டா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குண மருத்துவர் தியாகராஜா இறைவன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறுநீரக உபாதையினால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கி இருக்கும் நோயாளர்களின் நலன்கருதி குறைந்த கட்டணத்தில் எம்மால் சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ் மக்கள், தென் பகுதி வைத்தியசாலைகளுக்கு செல்லும் பொழுது மொழி பிரச்சனையினாலும் பணப்பிரச்சனையினாலும் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.
இதனை உணர்ந்து தமிழ் பேசும் ஊழியர்கள் அடங்கிய வைத்தியசாலையில் எமது மக்கள் நல்ல சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.
யாழில் இருந்து வருபவர்களுக்கு வைத்தியசாலைக்கு நேர் எதிரே தங்குமிடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் தமது வாகனத்திலேயே நோயாளிகளை வட பகுதியில் தமது வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து விடவும் எண்ணியுள்ளோம்.
இரவு ரயில் சேவையிலோ, பேருந்து சேவையிலோ, றாகம வைத்தியலைக்கு வந்தால் எதுவித தாமதமும் இன்றி MRI ஸ்கேன் (MRI scan) பரிசோதனையை செய்து கொண்டு வைத்தியசாலைக்கு 50 மீட்டர் தொலைவில் இருக்கும் றாகம ரயில் நிலையத்தின் ஊடாக அதே நாளில் யாழ்ப்பாணம் திரும்ப முடியும்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள ”லாவா” வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு.எமது வைத்தியசாலையான “மெல்ஸ்சா”இன் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்
பிறசெய்திகள்