
அக்கரைப்பற்று-பொத்துவில் வீதியில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்றில் ஆண் ஒருவர் மீது நேற்று (28) இரவு கத்திக்குத்து தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டவரை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த அரிசி ஆலையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவதினமான நேற்றிரவு 10 மணிக்கு இருவரும் ஒன்றாக இருந்து மதுபானம் அருந்திய நிலையில் இருவுருக்கும் இடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமான ஓருவர் மீது ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்டதில் கத்தி குத்து தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்
இந்த சம்பவத்தில் கத்துகுத்து தாக்குதலை மேற்கொண்ட மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவரே இவ்வாறு கைது செய்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிறசெய்திகள்