கிராமப்புற பாடசாலை ஆசிரியர்களுக்கு எரிபொருள்; ஆசிரிய சங்கம் கோரிக்கை !

நாட்டில் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக எரிபொருள் பாரிய பிரச்சனையாக உள்ளது,இதனால் கிராமப்புற ஆசிரியர்களது கல்விச் சேவையும் ,மாணவர்களது கல்வியும் பாதிப்புள்ளாகியுள்ளது .

எனவே திட்டமிடப்பட்ட முறையில் எரிபொருளினை வழங்கி மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு உரிய அதிகாரிகள் உறுதுணையாக நிற்க வேண்டும் என இலங்கை ஆசிரியச் சங்கத்தின் யாழ் .வலய செயலாளர் ஜெயராஜ் குலேந்திரன் வோல்வின் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்;

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக கல்விச் சமுதாயமானது பாரிய நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளது . இதனால் மாணவர்களுடைய கல்வியும் ,ஆசிரியர்களது கல்விச்சேவையும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது . இதற்கு எரிபொருளே காரணமாக
காணப்படுகிறது.

கல்வி அமைச்சினால் நகர்ப்புற பாடசாலைகள் அனைத்தும் எதிரவரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி மூடப்படும் என்றும் ,கிராமப்புற பாடசாலைகள் கிழமை நாட்களில் 3 நாட்களும் நடைபெறும் என கூறப்பட்டிருக்கிறது .

வட மாகாணத்தில் நகர்ப்புற பாடசாலைகள் எது ? கிராமப்புற பாடசாலைகள் எது? என்பது இற்றை வரைக்கும் ஐயப்பாடாகவே உள்ளது .இவை எந்தவிதமான வரையறையின்றி நடாத்தப்பட்டு வருகின்றன .ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பல தரபட்ட குழப்பங்கள் காணப்படுகின்றன .

எரிபொருள் பிரச்சினையை நாடு முழுவதும் எதிர்நோக்கியுள்ள இந்த கால கட்டத்தில் கிராமப்புற பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு வலயக்கல்வி பணிமணையூடாக திட்டமிடப்பட்ட முறையில் எரிபொருளினை வழங்கி மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றது .

கிராமப்புற பாடசாலைகள் அதிகமாக காணப்படுகின்ற பிரதேசங்களில் மாணவர்களின் கல்வியினை ஊக்குவிக்கும் முகமாக அதிபர்களும் ,ஆசிரியர்களும் ஒன்றிணைந்து சிறப்பான திட்டத்தினை வகுத்து முடியுமானளவில் நடாத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொளிறோம் .

கற்றல் ,கற்பித்தல் செயற்பாடுகளை தவிர்த்து ஏனைய செயற்பாடுகளை ஒதுக்கி வைக்குமாறு கல்வி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார் .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *