
நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான மலேஷிய நாட்டு உயர் ஸ்தானிகர் டன் யங் தாய் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பு இன்று (29) நீதி அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்திப்பின்போது விசேடமாக இரண்டு நாடுகளுக்கிடையில் இருக்கும் சந்தை மற்றும் ராஜதந்திர தொடர்புகள் தொடர்பாகவும் இலங்கை மற்றும் மலேஷியாவுக்கு மத்தியில் இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டடிருந்தது.
இரு நாடுகளுக்கிடையில் நீண்டகால நட்புறவு இருந்து வருவதாகவும் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு மலேஷிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
பிற செய்திகள்