
அரசியலில் பிரவேசித்தது தான் எடுத்த மிகவும் முட்டாள்தனமான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் அரசியல் களத்தில் பிரவேசித்திருக்க வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
“என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகவும் முட்டாள்தனமானமுடிவு என்று நான் கருதுகிறேன். அத்தகைய முடிவுக்காக நான் வருத்தப்படுகிறேன். இனி அரசியலுக்கு வரமாட்டேன். என்னைப் போன்றவர்களுக்கு இது பொருந்தாது,” என்றார்.
அரசியலில் இருந்து எதையும் பெறுவதை விட 2011 உலகக் கோப்பையைத் தவறவிட்டது போன்ற வாய்ப்புகளை மட்டுமே இழந்தேன் என்று ஜெயசூர்யா மேலும் கூறினார்.
பிற செய்திகள்