தீ விபத்தில் பெண் உயிரிழப்பு: திருமலையில் சம்பவம்

திருகோணமலை,ஜுன் 29

திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது.

வீட்டின் அறையில் இன்று காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீக்குச்சியின் தீ மூலமாக, சேமித்து வைக்கப்பட்டிருநத பெற்றோல் கொள்கலனில் தீ ஏற்பட்டதனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *