தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறு அஞ்சல் ஊழியர்களுக்கு அழைப்பு

கொழும்பு,ஜுன் 29

அஞ்சல் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளானமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை பணிக்கு திரும்பாத அனைத்து ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டு பணிக்கு சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினால், தற்போதைய நிலைமையை மீளாய்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் இன்று பணிக்கு வருகைதந்த ஊழியர்களுக்கு அஞ்சல்மா அதிபர் தமது அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *