
கொழும்பு,ஜுன் 29
தென் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரம் வௌியிடுவதில் நிவாரண காலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (30) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரை இவ்வாறு நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் காலாவதியான வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு தண்டப்பணம் அறவிடாது வாகன வருமான அனுமதிப்பத்திரம் வௌியிடப்படும்.