எதிர்வரும் நாட்களில் பல ரயில்கள் ரத்து செய்யப்படலாம்: காமினி

கொழும்பு,ஜுன் 29

ரயில்வே ஊழியர்கள் தமது பணியிடங்களுக்குச் செல்வதற்கு எரிபொருள் கிடைக்காமை காரணமாக எதிர்வரும் நாட்களில் மேலும் பல ரயில்கள் இரத்துச் செய்யப்படலாம் என பிரதிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் பிரச்சினையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (29) மற்றும் நேற்று (28) பல ரயில் சேவைகளை இரத்துச் செய்ய நேரிட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *