
மொரட்டுவ,ஜுன் 29
மொரட்டுவை கட்டுபெத்தை சந்திக்கு அருகில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலியாகினர்.
பிங்வத்தகே உக்குவா என அழைக்கப்படும் நிலந்த குமார சில்வா மற்றும் மொஹமட் அர்பத் சம்சான் ஆகியோரே துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.
பலியான பிங்வத்தே உக்குவா என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுக்கப்பட்டவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
தமது வாகனத்திற்கு எரிபொருள் வழங்க முடியும் என நபர் ஒருவர் விடுத்த அழைப்புக்கு அமைய பாணந்துறை பகுதியை சேர்ந்த குறித்த இருவரும் கட்டுபெத்த பகுதிக்கு பிரவேசித்தனர்.
இதன்போது, உந்துருளியில் பிரவேசித்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் பலியாகினர்.