கடினமான 3 வாரங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்: ரணில்

கொழும்பு,ஜுன் 29

தான் முன்னர் குறிப்பிட்டபடி மிகவும் கடினமான மூன்று வாரங்களை இலங்கையர்கள் இப்போது எதிர்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) கொழும்பில் தெரிவித்தார்.
எதிர்வரும் காலம் படிப்படியாக சிறப்பாக அமையும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு எரிபொருள் கப்பல் வருவதற்கான திகதி ஜூலை 22 ஆம் திகதியாகும்.

அதற்கு முன்னர் ஒன்று அல்லது இரண்டு எரிபொருள் கப்பல்களை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய பணம் இருந்தாலும் வாங்குவதற்கு உக்ரைன் நெருக்கடியால் கப்பல்களை பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *