டக்ளஸை சந்தித்த ஜப்பான் தூதுவர்

யாழ்ப்பாணம்,ஜுன் 29

வடக்கிற்கான 3 நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்தார்.

சமகால அரசியல் நிலைவரங்கள், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், குறிப்பாக கடலட்டை உற்பத்தி உட்பட நீர்வேளாண்மை எனப்படும் பண்ணை முறையில் ஏற்றுமதித் தரத்திலான  கடலுணவுகளை உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஜப்பானிய துாதுவருக்கு தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜப்பானின் உயரிய தொழில்நுட்ப அனுபவங்களும் – உதவிகளும் கிடைக்குமாயின், எமது மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *