
இந் நேரத்தில் நாட்டில் பல பிரச்சினைகள் உள்ள சந்தர்ப்பத்தில் காணப்படுகிறது.
அதாவது சுகாதார ரீதியில், கல்வி ரீதியில், அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந் நேரத்தில் நமக்கு முக்கியமானது ஒற்றுமையுடன் செயற்படுவது ஆகும்.
நாளை என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை.மக்களிற்கு உணவு இல்லாத நிலை ஏற்பட்ட வாய்ப்புள்ளது.
நாட்டில் எடுக்கும் முடிவுகள் சரியானதா என சிந்தித்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு சரியான தலைவர் இருக்க வேண்டும். ஒரு நாட்டையே வழங்கி இந் நாட்டை பாரிய அவல நிலையை ஏற்படுத்தியவர்கள் இருக்கும் வரை இந் நாட்டை மீட்க முடியாது.
அதனால்தான் மக்களின் கோரிக்கை படி ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ அவர்கள் வீடு செல்வது சரியான விடயம்.
மற்றும் இப் பிரச்சனையில் இருந்து மீண்டுவருவதற்கு என்ன வழி என்று முதலில் பரிசீலனை செய்து தீர்வுகளை எடுக்க வேண்டும். மற்றும் சுகாதார சேவைகளிலும் கொள்ளை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவையை பொருத்தளவில் மருந்துகள் இல்லை. இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சிறந்த தலைவர்கள் நமக்கு அவசியம்.
சுகாதார சேவையை நேர்த்தியாக மேற்கொள்ள நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளி நாடுகளிலும் ஆலோசனைகளை பெற உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்