கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் நால்வர் கைது

கொழும்பு,ஜுன் 29

நாட்டில் அதிகரித்த எரிபொருள் விலை மற்றும் வாழ்கைச் செலவுக்கு எதிராக கொழும்பு கோட்டை, செத்தம்  வீதி பகுதியில் புதன்கிழமை (29) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனால் அபப்குதியில் பதற்றமான சூழல் ஒன்று நிலவியது.

ஜனாதிபதி மாளிகை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்டமையால் இந்த பதற்ற நிலை உருவானது.

ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் உள்ளிட்டவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தால்  பொலிஸார் அப்பகுதியெங்கும் குவிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர், கோட்டை பொலிஸாரால் ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் உள்ளிட்ட நால்வரை கைது செய்யப்பட்டனர். அவர்களை கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *