ரஷ்யாவில்…

ரஷ்யாவில் இருந்து கொழும்புக்கான எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கூற்றுப்படி, இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு (UAE) விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜூலை 10ம் திகதிக்கு முன்னர் நாட்டிற்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்தியாவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

தற்போது, ​​அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்கு அரசாங்கம் பல நாடுகளை அணுகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *