
கொழும்பு, ஜுன் 30
பாராளுமன்ற விவகாரங்களுக்கான விசேட குழுக்கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானிக்கும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.