விம்பிள்டன் டென்னிஸ்: ஜோன் இஸ்னர்- மரியா சக்கரி மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் ஜோன் இஸ்னர் மற்றும் மரியா சக்கரி ஆகியோர் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் ஜோன் இஸ்னர், பிரித்தானியாவின் என்டி முர்ரேவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய ஜோன் இஸ்னர், 6-4, 7-6, 6-7, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.


பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், கிரேக்கத்தின் மரியா சக்கரி, பல்கேரியாவின் விக்டோரியா டோமோவாவுடன் மோதினார்.

இப்போட்டியில் பெரிதளவான அழுத்தங்களை எதிர்கொள்ளாத மரியா சக்கரி, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *